தகவல் தொழில்நுட்பத்துறையின் செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டம்

தகவல் தொழில்நுட்பத்துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன், வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார். கிராம புறங்களில் இணைய சேவையை கொண்டு செல்லும் இல்லம் தோறும் இணையம், காகிதம் இல்லா அலுவலக முறை போன்ற பல்வேறு திட்டப்பணிகளின் நிலைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார். தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version