மதுரையில் ரயிலுக்கடியில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்பு

மதுரையில் ரயிலுக்கடியில் சிக்கிய பெண், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இன்று காலை மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது விஜயபூர்ணிமா என்ற பெண் தூக்க கலக்கத்தில் இருந்ததால் ரயிலில் மெதுவாக சென்று கொண்டிருந்த போதே கீழே இறங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் இருந்த இடைவெளியில் அவர் சிக்கியுள்ளார். ரயில் நின்றதால் பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் மதுரை வரவேண்டிய ஹவுரா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, பாண்டியன் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

Exit mobile version