செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வேலைசெய்து வந்த 11 பேரை வருவாய்த் துறையினர் மீட்டனர்.

முனியப்பன்பாளையம், நகலூர், பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணியாற்றி வருவதாக வருவாய்த் துறையினருக்கு  தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு கோபிச்செட்டிப்பாளையம் கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் சென்ற வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வந்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டனர்.

Exit mobile version