புகழ்பெற்ற காளி கோயிலில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்

மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்குள்ள புகழ்பெற்ற காளி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

மியான்மருக்கு அரசுமுறை பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது துணைவியாருடன் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அதிபர் உ வின் மின்ட், ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி ஆகியோரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளுக்கிடையில், நீதித்துறை பயிற்சி, அறிவியல், தொழில்நுட்பத்துறையில் இருநாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில், யாங்கோனில் உள்ள புகழ்பெற்ற காளி கோயிலில் தனது மனைவியுடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.

 

Exit mobile version