பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதுதான் எதிர்கட்சிகளின் ஒரே நோக்கம் -மோடி

பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார் .அதில், எதிர்க்கட்சிகள் விரக்தியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே அவர்களின் ஒரே நோக்கம் என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார். எதிர்க்கட்சிகளிடம் ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் இல்லை என்று  மோடி தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளில் ஏராளமான பேர் பிரதமர் ஆசையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர்,  உறுதியான நிலைப்பாடு எதுவும் இல்லாத மோசமான பின்னணிதான் இருப்பதாக மோடி கூறியுள்ளார். ரபேல் விமான  விவகாரம் குறித்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர்,  இது நேர்மையான மற்றும் வெளிப்படையான கொள்முதல் முறை என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Exit mobile version