அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் நிவாரண பணிகள் -அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகை, விரைவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இரண்டாம்சேத்து மற்றும் வல்லம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதி விரைவில் அவர்களது வங்கிகணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

 

Exit mobile version