கேரளாவில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லம் புனரமைப்பு

கேரளாவில் ஓரு கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தை கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார். கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த பூர்வீக இல்லம் உள்ளது. பழுதடைந்த இந்த இல்லத்தை மனித நேய ஐ.ஏ.எஸ் கல்வி மையம் புனரமைத்தது. ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த இல்லத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இதனை அம்மாநில ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மனித நேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version