தருமபுரியில் 4.97 கோடி ரூபாய் செலவில் பத்து ஏரிகளை புனரமைக்கும் பணிகள்

தருமபுரியில் நடைபெற்ற ஏரிகளை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் பத்து ஏரிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திது பேசிய அவர், குடிமராமத்து திட்டத்தின் கீழ் பத்து ஏரிகளில் 4 கோடியே 97 ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 30 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரம் பயனடையும் வகையில் இத்திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசுக்கு தருமபுரி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version