கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் நீர் வெளியேற்றம் குறைப்பு

கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால் கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல்லில், வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. கர்நாடக அணைகள், முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில், வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்தால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 9வது நாளாக சுற்றுலா பயணிகள் பரிசல் போக்குவரத்திற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version