காணாமல் போன உறவினர்களை மீட்டுத் தரக்கோரி கையெழுத்து இயக்க போராட்டம்

இலங்கையில் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐ.நா. முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி கையெழுத்து இயக்க போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இலங்கை அரசிடம் சரணடைந்த பின்னரும் காணாமல் போன உறவினர்களை மீட்டுத் தரக்கோரி ஈழத் தமிழர்கள் வவுனியா மாவட்டத்தில் கையெழுத்து இயக்க போராட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழுவினர், தற்போது 3 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளதாக தெரிவித்தனர். ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு அமெரிக்க மற்றும் ஐ.நா. சபையால் நல்ல தீர்வை கொண்டு வர முடியும் என கூறினார்.ஈழத் தமிழர்களுக்காக போராடிய செல்வாவின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களை கைவிட்டுவிட்டதாக குற்றம்சாட்டினர்.

Exit mobile version