ஸ்ரீவைகுண்டம் அருகே உற்சாகமாக நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம் 

அதிமுக 47-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இந்தப் பந்தயத்தில் 10 பெரிய மாட்டு வண்டிகளும்,19 சிறிய மாட்டு வண்டிகளும், 37 பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் இந்தப் பந்தயத்தை துவக்கி வைத்தார். சீறிப் பாய்ந்த காளைகள் பார்வையாளர்களை வெகுவாக கவந்தன.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Exit mobile version