மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – கர்நாடக அரசு

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதை திரும்பப் பெறுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தத் திட்டத்தால், காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய நீர்வள ஆணையம், இத்திட்டம் குறித்த தமிழகத்தின் நியாயமான எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல், வரைவு திட்டத்தை தயாரிக்க கர்நாடக அரசிற்கு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடகா அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக அரசிடம் பேசுவதற்கு நேரம் கேட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version