ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை வழக்கில், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள அமுதா மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் உள்பட 4 பேர் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், மருத்துவமனை செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவரும், ஆம்புலன்ஸ் ஓட்டுனருமான ரவிச்சந்திரன் உள்ளிட்ட 12 பேர் காவல்துறையினரால், கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமின் கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளவர்கள், சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

Exit mobile version