இத்தாலியில் வரும் 15ம் தேதி ரன்வீர், தீபிகா திருமணம் – இன்று திருமணத்திற்காக இத்தாலி புறப்பட்டு சென்றனர்

பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தங்களது திருமணத்திற்காக இன்று அதிகாலையில் இத்தாலி புறப்பட்டு சென்றனர்.
பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன், இருவரும் வரும் 15ம் தேதி இத்தாலியில் உள்ள காமோ நகரில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர். மிகவும் பிரமாண்டமாக இரண்டு தினங்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு நெருக்கமான பாலிவுட் பிரபலங்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மும்பையில் வரும் 1ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவர்களது திருமணம் தென்னிந்திய மற்றும் வட இந்திய பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தாலி செல்வதற்காக இன்று அதிகாலையில் ரன்வீர் மற்றும் தீபிகா இருவரும் தங்களது குடும்பத்தினருடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் செய்தியாளர்களை நோக்கி கையசைத்தனர்.

Exit mobile version