ராமநாதபுரம் அருகே கார் – தனியார் ஆலை பேருந்து மோதி விபத்து

ராமநாதபுரம் அருகே கார் மீது தனியார் ஆலையின் பேருந்து மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். கமுதி அருகே கீழராமநதியில் தனியார் ஆலையிலிருந்து பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து, கார் மீது பலமாக மோதியதில், காரில் பயணம் செய்த 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version