மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில், தமிழக அரசின் மதுவிலக்கு காவல்துறை மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில், போதை
பொருட்களுக்கு ஏதிரான விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டன. கிராமிய பாடல்கள் மற்றும் நடனங்கள் ஆடி கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version