மத்திய அரசின் செயல்பாடுகளால் சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை – ராஜ்நாத் சிங்

மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மாநில அரசுகளின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே சட்டசபை தேர்தல் முடிவுகள் உள்ளதாக தெரிவித்த அவர், மத்திய அரசின் செயல்பாடுகள் காரணமாக சட்டசபை தேர்தலில் தோல்வி ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்துள்ளது என்றும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version