7 பேரை தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை – நடிகர் ரஜினிகாந்த்

தான் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை என்றும், தமிழக அரசு ஏழை மக்களுக்கு இலவசங்களை கொடுப்பது அவசியம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை, போயஸ்கார்டனில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தனது கருத்து என்று கூறினார். சிறையில் இருக்கும் 7 பேரைப் பற்றி தெரியாத அளவுக்கு தான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று ரஜினி குறிப்பிட்டார்.

பாஜகவை ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதனை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைப்பவர்களுக்கு பாஜக ஆபத்தானது தான் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

தான் முழுமையான அரசியல்வாதி இல்லை என்றும், மக்களுக்கு இலவசங்கள் அவசியம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

 

 

Exit mobile version