ராஜபக்சே பிரதமராக பதவியேற்றிருப்பது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது -தமிழ் தேசிய கூட்டமைப்பு

ராஜபக்சே பிரதமராக பதவியேற்றிருப்பது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசியலில் உச்சகட்ட பரபரப்பு உருவாகியுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் செயல்பாடு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று இருப்பது தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதன் பின்னணியில் சீனா உள்ளிட்ட நாடுகள் இருப்பதாகவும் சேனாதிராஜா குற்றம்சாட்டினார்.

Exit mobile version