தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கீழ்த்திசைக்காற்று வலுப்பெற்று வருவதால் கடந்த 29ம் தேதி தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகளவாக 31 டிகிரி செல்சியசும் குறைந்த அளவாக 23 டிகிரி செல்சியசும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post