ராஜஸ்தானில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை ராகுல் காந்தி முடிவெடுப்பார் : அசோக் கெலாட்

ராஜஸ்தானில் முதலமைச்சராக பதவியேற்பது யார் என்பது குறித்து ராகுல் காந்தி தான் முடிவெடுப்பார் என அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்று பெற்று முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸின் பொது செயலாளரும் ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சருமான அஷோக் கெலாட், ஜெய்பூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராஜஸ்தானின் முதலமைச்சர் யார் என்பதை ராகுல் காந்தி தான் முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார். அசோக் கெலாட்டிற்கும், சச்சின் பைலட்டிற்கும் முதலமைச்சர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version