காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோமாளி போல் பேசுகிறார் – சந்திரசேகர ராவ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோமாளி போல் பேசுவதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அங்கு ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சந்திரசேகர ராவ் தெலுங்கானா வளர்ச்சி திட்ட நிதியை கொண்டு, தனது குடும்பத்தை பணக்கார குடும்பமாக்க நினைக்கிறார் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இல்லண்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தாங்கள் திட்டங்களை தான் வகுத்து வருகிறோம் என்றும், கங்கிரசைப் போல் கமிஷனுக்காக செயல்படவில்லை எனவும் விமர்சித்தார்.

Exit mobile version