போராட்டத்தை தூண்டி விடுவதாக குற்றச்சாட்டு -சபரிமலை தந்திரி பேரன் கைது!

சபரிமலை தந்திரியின் பேரன் ராகுல் ஈஸ்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நிலக்கல் தரை முகாமில் இருந்த போது அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவரை பம்பா காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தான் வேறு ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது, தன்னை கைது செய்ததாக தெரிவித்தார்.

தான் எந்த பெண்ணையும் தாக்கவில்லை என கூறிய அவர், தன் மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தீர்ப்பளித்தபோது, அதனை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ராகுல் ஈஸ்வர் கூறி இருந்தார்.

மேலும் போராட்டக்காரர்களை அவர் மறைமுகமாக தூண்டிவிடுவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Exit mobile version