கண்ணை திறந்து வைத்துக் கொண்டு கனவு காண வேண்டாம் ராகுல் – அமித்ஷா கிண்டல்

மத்திய பிரதேசத்தில் நவம்பர் 28 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

ஆளும் கட்சியான பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது. காங்கிரசோ எப்படியாவது, ஆட்சியை தட்டிப் பறித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாய் உள்ளது.

இந்நிலையில் சாத்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித்ஷா ராகுலை கடுமையாக கிண்டல் செய்தார். ” மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என ராகுல் பாபா கூறி வருகிறார்.

நான் அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். கனவு காண்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அது பகல் கனவாக போய் விட கூடாது. அதுவும் கண்ணை திறந்து வைத்துக் கொண்டு கனவு காண்கிறார் ராகுல்.

“இவ்வாறு அமித்ஷா கிண்டல் அடித்தார். இந்நிலையில் ராகுல் காந்தியும் மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். சாத்ரி என்ற இடத்தில் மாதவராவ் சிந்தியாவின் நினைவிடத்திற்கு சென்று ராகுல் காந்தி, கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் மரியாதை செய்தனர்.

 

 

 

Exit mobile version