இந்திய விமானப் படைக்கு ஆர்-27 ரக ஏவுகணைகள் வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்து

 

இந்திய விமானப் படைக்கு ஆர்-27 ரக ஏவுகணைகளை, ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்க இந்த ஏவுகணைகள் வாங்கப்பட்டுள்ளன. ஆர்-27 ரக ஏவுகணைகளை சு-30 மற்றும் சுகோய் ரக விமானங்களில் இருந்து ஏவ முடியும். விண்ணில் பறந்த படி, நீண்ட தூரத்தில் செல்லும் எதிரி நாட்டு விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்க ஆர்-27 ஏவுகணைகள் பயன்படும்.

கடந்த 50 நாட்களில் இந்திய விமானப் படைக்காக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கும் மேல் போர் உபகரணங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பகுதியாக ஆயிரத்து 500 கோடிக்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

Exit mobile version