புல்வாமா தீவிரவாத தாக்குதல் ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் ஒப்படைப்பு

புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு சம்மந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்தது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில், பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ இ முகமது அமைப்பு ஈடுபட்டதாக இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம், தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது.

இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்து வருவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தது. தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான், இனியாவது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

Exit mobile version