புதுச்சேரியில் 3 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்கக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தங்களுக்கு 3 மாதங்களாக வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், 2015-ல் இருந்து தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தை தங்களது கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்றும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள், வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Exit mobile version