புதுச்சேரி அரசு பேருந்து ஊழியர்களின் வங்கி கணக்கில் 2 மாத ஊதியம் செலுத்தப்பட்டது – அரசு தகவல்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்து ஊழியர்களின் வங்கி கணக்கில் 2 மாத ஊதியம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கவில்லை எனக் கோரி புதுச்சேரி அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இரண்டு மாத ஊதியம் ஊழியர்களின் வங்கி கணக்கில் அம்மாநில அரசு செலுத்தியுள்ளது. இதனையடுத்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக்குப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version