அரசு ஊழியர் பொது இடமாறுதல் நிறுத்திவைப்பு – பணியாளர் துறைச் செயலாளர் சுற்றறிக்கை

அரசுப் பணியிடங்களில் பொது இடமாறுதலைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க பணியாளர் நலன் மற்று நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்துத் துறைகளுக்கும், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், நடப்பாண்டில்(2020-2021) இடமாறுதல் கோரியுள்ளவர்களுக்கு மட்டும் மாறுதல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியான இடமாறுதலும், பரஸ்பர இடமாறுதலும் அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இடம் மாறுதல் பயணப்படி செலவினங்களைக் குறைக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version