முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு

சேலத்தில், தனது இல்லத்தில் பொதுமக்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

சேலம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். இதனிடையே ஓமலூரில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், இன்று காலை பொதுமக்களைச் சந்தித்த அவர், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

200-க்கும் மேற்பட்டோர் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக, உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version