பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட், இன்று பிற்பகல் 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்து உள்ளது. இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் இன்று மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மேலும், இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.

Exit mobile version