அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் போராட்டம்

காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

நியூயார்க் நகரில், பாகிஸ்தான் தூதரக அலுவலகம் முன்பு குவிந்த நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள், கையில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டனர். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரை சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version