உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

உத்தர பிரதேசத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலம் காஜிபுரில் நடந்த நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி பங்கேற்றார். அவரது வருகையை எதிர்த்து ராஷ்ட்ரீய நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர்கள் காஜிபுரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தினர். பதிலுக்கு, போராட்டக்காரர்களும், காவலர்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில், படுகாயமடைந்த காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ராஷ்ட்ரீய நிஷாத் கட்சியைச் சேர்ந்த, 15 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version