விலையில்லா உபகரணங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக அரசு வழங்க கூடிய விலையில்லா உபகரணங்களை மாணவ மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று ஆயிரத்து 733 மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு வழங்கியிருக்கும் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகள் முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தியதுடன், எதிர்காலத்தில் அனைவரும் மருத்துவர்களாக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

Exit mobile version