புரோ கபடி: பாட்னா அணியை 13-12 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் வீழ்த்தியது

புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி, பாட்னா பைரட்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டியின் 129-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி, பாட்னா பைரட்ஸை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி முதல் பாதி முடிவில் ஒரு புள்ளி வித்தியாசத்தில், 13க்கு 12 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் குஜராத் அணி 37க்கு 29 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸை, பெங்கால் வாரியர்ஸ் எதிர்கொண்டது. முதல் பாதியில் 7க்கு 8 என்ற புள்ளிக்கணக்கில் பின் தங்கிய பெங்கால் அணி இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றதுடன் பெங்களூருவுடன் சம நிலை வகித்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்கால் அணி 37 க்கு 31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

Exit mobile version