தனியார் உணவக ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோர் போராட்டம்

உணவு பொருட்களை டெலிவரி செய்யும் தனியார் உணவக ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோர் தாம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தாம்பரம் அடுத்த செம்பக்கத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் 400க்கும் மேற்பட்டோர் டெலிவரி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கிலோ மீட்டருக்கான டெலிவரி ஊதிய தொகையை குறைத்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து வந்த சேலையூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதேபோல் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த உணவக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version