மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் தானம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, தனியார் நிறுவனம் ஒன்று 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸை தானமாக வழங்கி உள்ளது.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்க பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்தநிலையில் தனியார் நிறுவனம் ஒன்று 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸை கோயிலுக்கு தானமாக கொடுத்துள்ளது. தனியார் நிறுவன மேலாளர், கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் ஆம்புலன்சை ஒப்படைத்தார்.

Exit mobile version