பாளையங்கோட்டை மத்திய சிறையில் வருடாந்திர சோதனையில் ஈடுபட்ட சிறைத்துறையினர்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை காவலர்கள் வருடாந்திர சோதனையில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இச்சிறையில் ஆண்டுதோறும் சிறைத்துறையினர் சோதனை நடத்துவது வழக்கம். சிறையில் உள்ள கைதிகளிடம் பீடி, சிகரெட், ஆயுதங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பதைக் கண்காணிக்கும் விதமாக சோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று சுமார் 2 மணி நேரம் சிறைக்காவலர்களால் சோதனை நடத்தப்பட்டது. எனினும் இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version