தீவிரவாத முகாம்கள் தகர்ப்பு குறித்து பிரதமர் விளக்கம்

தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கினார். பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழித்தது. இந்த தாக்குதல் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கமாக எடுத்துரைத்தார்.

பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊடூருவி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். விமானப்படை நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் தரை மட்டமாக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Exit mobile version