நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் தலைவர்கள் கொடியேற்றி சுதந்திர தினத்தை நினைவு கூறுகின்றன. இன்று காலை செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடி கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

இந்தநிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் என டிவிட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.

Exit mobile version