இலங்கையில் அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வேட்பு மனுத்தாக்கல்

இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் களமிறங்கியுள்ள கோத்தபய ராஜபக்ச தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் நவம்பர் மாதம் 16ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரசிங்க ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் ஆளுங்கட்சியான பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச தனது வேட்பு மனுவைக் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணையக்குழுவில் தாக்கல் செய்துள்ளார்.

Exit mobile version