200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் கைது

200 ரூபாயை காணவில்லை என்ற ஆத்திரத்தில் கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி சுபிதா மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தான் வைத்து இருந்த இருநூறு ரூபாயை காணவில்லை எனக் கூறி சுபிதாவை மணிகண்டன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சுபிதா, நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கர்ப்பிணி சுபிதாவின் மரணத்திற்கு காரணமான கணவன் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version