கஜா புயல் பாதிப்பு – அண்ணா பல்கலை. தேர்வுகள் டிச.14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கஜா புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரியில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாளை தேர்வுகள் நடைபெறவிருந்தன. இந்நிலையில், கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தத் தேர்வுகள், டிசம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வினை எழுத இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version