வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கியது!

சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் தபால் வாக்குகளை வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் பணி துவங்கியது.

சென்னையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று உறுதியானவர்கள் என, 7 ஆயிரத்து 300 பேர் தபால் வாக்குகள் செலுத்தவுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, தபால் வாக்குகளை வீடுகளுக்கே சென்று சேகரிக்க மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சென்னையில் இன்று தொடங்கி, வருகிற 30-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், தபால் வாக்குகளை சேகரிக்க, 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, பிரத்யேக பெட்டியினுள் வைத்து சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version