குடிநீர்த்தட்டுப்பாட்டை நீக்க பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள்

அந்தியூர் அருகே குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த குப்பணாங்கரடு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை மறியலில் அமரவிடாமல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் உடனடியாக பேசி, குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுத்தனர். காவல்துறையினரின் விரைவான செயலால் சாலை மறியல் தவிர்க்கப்பட்டு, தண்ணீர் கிடைத்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version