கத்தியைத் தூக்கி கெத்து காட்டிய புள்ளிங்கோ. மாவு கட்டு போட்டு அழகு பார்த்த போலீஸ்!

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை சந்திப்பில் இரண்டு இருசக்கர வாகனங்களில் புள்ளிங்கோ 6 பேர் அதிவேகமாக வந்துள்ளனர். அலப்பறை கொடுத்தபடி வந்தவர்களை அங்கு சோதனையில் ஈடுபட்ட கொடுங்கையூர் போலீசார் நிறுத்தியுள்ளனர். அப்போது தப்பிக்க முயன்றவர்களில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருந்து 2 கத்திகள் கீழே விழுந்துள்ளன. இதனால் சுதாரித்த போலீசார், அந்த பைக்கை துரத்தியுள்ளனர்.

போலீசாருக்கு போக்குக் காட்டிச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் கீழே பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் இருவருக்கு கை உடைந்துள்ளது. இதையடுத்து அனைவரையும் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அவர்கள் கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக், வெங்கடேஷ் என்கின்ற தக்காளி, பிரவீன் குமார், செல்வகுமார், கார்த்திகேயன், வின்சென்ட் என்பது தெரியவந்தது. இதில் கீழே விழுந்ததில் வெங்கடேஷ் என்கிற தக்காளி மற்றும் பிரவீன் குமார் ஆகிய இருவருக்கும் வலது கை உடைந்தது. மதுபோதையில் இருந்த புள்ளிங்கோ ஆறு பேரும் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ஆறு பேரையும் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version