காவலர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரிய மனு 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விவகாரத்தில் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், மற்றும் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனு 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சாத்தான்குளம் விவகாரத்தில் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் ரகுகணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முதலமைச்சர் பரிந்துரைத்ததன் படி சிபிஐக்கு மாற்றப்பட்டு டெல்லி சிபிஐ புலனாய்வு 2ம் பிரிவு அதிகாரிகள் நேரடியாக விசாரணையை தொடங்க உள்ளனர். இந்த வழக்கிலிருந்து ஜாமீன் கோரி ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஆகியோர் முதன்மை ஆய்வாளர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது இருவரின் மீதான ஜாமீன் மனுவை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version