போர்வெல் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே போர்வெல் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார், இது கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவையார்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் விஜயகுமார் போர்வெல் தொழிலாளியான இவர் போர்வெல் வேலைக்கு சென்று விட்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவது வழக்கம். போர்வெல் பணிக்கு சென்று விட்டு கடந்த வாரம் அவையார்பாளைத்தில் உள்ள தனது வீட்டிற்கு ஓய்வுக்காக வந்துள்ளார். 

அப்போது கடந்த 18 ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார் விஜயகுமார் இதனால் வீட்டிற்கு செல்லாமால் அவையார்பாளையம் பேருந்து நிலையத்திற்கு முன்பு உள்ள நிழல்குடையில் படுத்து காலை வரை உறங்கியுள்ளார். ஆனால் காலை வெகுநேரமாகியும் அவர் எழுந்துருக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த பொது விஜயகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதனையடுத்து விஜயகுமார் மரணம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து விஜயகுமாரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version