சந்தியாவின் தலை, வயிறு பகுதியை தேடும் பணி தீவிரம்

கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் பாகங்களை கொண்டு செல்ல பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், சந்தியாவின் தலையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில், கடந்த மாதம் 21 ஆம் தேதி பெண்ணின் இரண்டு கால், கை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கொல்லப்பட்ட பெண் கன்னியாகுமரியை சேர்ந்த சந்தியா என்பதை கண்டுபிடித்தனர். கணவர் பாலகிருஷ்ணனே கொலையில் ஈடுபட்டிருக்கிறார்.

பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டிய ஈக்காட்டுத்தாங்கல் கூவத்தில் இருந்து சந்தியாவின் உடலின் மற்றொரு பாகம் மீட்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை வைத்து ஏற்கனவே மரபணு சோதனை நடத்தப்பட்ட உறுப்போடு ஒத்துப்போகிறதா? என்று மருத்துவ சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தலை மற்றும் வயிறு பகுதியை தேடும் பணி நேற்று இரவு நிறுத்தப்பட்ட நிலையில், காலையில் இருந்து தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், உடல் பாகங்களை கொண்டு சென்று வீச பாலகிருஷ்ணன் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version