பெண்ணை தாக்கிய திமுகவைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில், பெட்டிக்கடையை காலி செய்யச் சொல்லி அத்துமீறி பெண்ணை தாக்கிய திமுகவைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

திருமயம் பைரவர் கோவில் அருகே, வாசுகி என்பவர் 35 வருட காலமாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கோவிலில் உடைக்கப்படும் தேங்காய்கள் மற்றும் காணிக்கைகளை, அற நிலையத்துறையிடமிருந்து, கடந்த 4 வருடங்களுக்கு முன் வாசுகி ஏலத்தில் எடுத்து நடத்தி வந்துள்ளார். அதன்பிறகு, தற்போது திமுக செயலாளர் சரவணன் என்பவருடைய அண்ணன் சிவராமன், அதை ஏலத்தில் எடுத்துள்ளார். மேலும் வாசுகியின் கடையின் முன் இவரும் பெட்டிக்கடை வைத்துள்ளார். கோவிலுக்கு வந்து செல்பவர்கள் வாசுகியின் கடையிலேயே வழக்கம்போல் பொருட்களை தொடர்ந்து வாங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், கடையை காலி செய்ய சொல்லி கடையின் பொருட்களை உடைத்து, அத்துமீறி பெண்ணையும் தாக்கியுள்ளனர்.

Exit mobile version